• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் ஜுலை 15ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து

June 27, 2020 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கொரோனா பரவல் வேகம் எடுத்திருப்பதைத் தொடர்ந்து, தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு கோரிக்கையை ஏற்று திங்கட்கிழமை முதல் ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், 4 சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுத்தொகையும் திருப்பி அளிக்கப்படும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட்டுக்கான தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

திருச்சி – செங்கல்பட்டு, மதுரை – விழுப்புரம், கோயம்புத்தூர் – காட்பாடி, கோயம்புத்தூர் – மயிலாடுதுறை,திருச்சி – நாகர்கோவில், கோயம்புத்தூர் – அரக்கோணம்
இடையே சிறப்பு ரயில்கள் இயக்கபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க