• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 52 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர் – விஜயபாஸ்கர்

April 25, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1821 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1821 -ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் மட்டும் இன்று 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 94 பேர் குணமடைந்தனர்.இதுவரை 960 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு 835 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 52 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். மத்தியக் குழுவே இதைப் பாராட்டியுள்ளது என்றார்.

மேலும் படிக்க