தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை என ஐசிஎம்.ஆர் தெரிவித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு
முதல்முறையாக 4,000ஐ கடந்தது.
தமிழகத்தில் இன்று மேலும் 4,343 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 62,598 ஆக அதிகரித்தது.இதன் மூலம் தமிழகத்தில் மொத்த
பாதிப்பு எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 57 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1321 ஆக அதிகரித்தது.
அதேசமயம் இன்று மேலும் 3,095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம்
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 56,021 ஆக உயர்ந்தது.
அறிகுறி இல்லாதவர்கள், இருப்பவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான அக்கறையுடன் சிகிச்சை நடைபெறுகிறது. முதியவர்கள், இதய நோய், கேன்சர் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பது சவாலாக உள்ளது. தமிழகத்தில் 75,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 57% ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை என ஐசிஎம்.ஆர் தெரிவித்துள்ளது.
இவ்வாறு விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !