• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் – ஒரே நாளில் 3509 பேர் பாதிப்பு !

June 25, 2020

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரேநாளில் 3509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் புதிதாக 3,509 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது. அதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,834 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 45 பேர் உயிரிழந்தனர்.இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம், இன்று 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை மொத்தம் 39,999 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்,இன்றைக்கு 32,543 மாதிரிகள் . பரிசோதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்தம் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 10,08,974 ஆக உயர்ந்துள்ளன.இன்றைய தேதியில் 30, 064 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் படிக்க