• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,535 ஆக உயர்வு !

May 9, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று புதிதாக 526 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று புதிதாக 526 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில்,360 பேர் ஆண்கள்,166 பேர் பெண்கள்.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 279 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதன் காரணமாக, சென்னையில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,330ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக விழுப்புரத்தில் புதிதாக 67 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 4 பேர் கரோனா தொற்றால் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம்,இன்று ஒரே நாளில் 219 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,824 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 12,999 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதிக்கப்பட்ட நபர்கள் 2,19,406. இன்றைய தேதியில் மொத்தம் 4,664 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க