December 12, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்டு “தமிழ்நாடு ஸ்டார்ட் அப் வளர்ச்சி மாநாடு” என்னும் தலைப்பில் இரண்டு நாட்கள் கோவை ரத்தினம் கல்லூரியில் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில் ஐடி பூங்காக்களில் 5000 ஆசிரியர்கள், ஒரு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். அதற்காக அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம் என்றார். தமிழகத்தில் தரமான ஐ.டி.படிப்பை பெறுவதற்காக தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்க உள்ளோம் என்றார்.