November 30, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 720 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 720 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 109 பேருக்கு கொரோனா பாதிப்பு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27,26,917 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களில் 9 பேர் உயிரிழந்தனர்.இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,481 ஆக உள்ளது.அதேசமயம் இன்று மட்டும் 758 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,82,192 ஆக அதிகரித்தது.
தமிழகத்தில் இன்று 1,00,048
மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 5,42,70,347 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.