June 6, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 20,421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 20,421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 2,645 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22,37,233 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களில் 434 பேர் உயிரிழந்தனர்.இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,005 ஆக உள்ளது.அதேசமயம் இன்று மட்டும் 33,161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,65,939 ஆக அதிகரித்தது.
தமிழகத்தில் இன்று 1,74,982 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.இதுவரை 2,87,21,659 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.