• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் இன்று புதிதாக 231 பேருக்கு கொரோனா பாதிப்பு!

May 2, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று புதிதாக 231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று புதிதாக 231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.இதுவரை 2,757 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ள நிலையில் 1,384 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று புதிதாக 174 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
அரியலூரில் 18,காஞ்சிபுரத்தில் 13, திருவள்ளூரில் 7,செங்கல்பட்டில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் 1,257ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 10,127 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.இதுவரை 1,39,490 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்த 29 பேர் குணமடைந்துள்ளனர்.மாநிலத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் பலி – இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க