May 12, 2020 தண்டோரா குழு
தமிழகத்தில் புதிதாக 716 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 716 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதில் அதிகபட்சமாக சென்னையில் 510 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,882 ஆக உயர்ந்துள்ளது.இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 83 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,134-ஆக உயர்ந்துள்ளது.