July 5, 2020 தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,077. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 1713 பேருக்கு தொற்று உறுதி செய்ய்யப்பட்டுள்ளது.இதனால், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களில் 60 பேர்
உயிரிழந்தனர்.இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,1510 ஆக உள்ளது.
அதேசமயம் இன்று மட்டும் 2,186 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 62,778 ஆக அதிகரித்தது.
இன்று 34,831 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 13,41,715 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசு ஆய்வகங்கள் 49, தனியார் ஆய்வகங்கள் 46 என மொத்தம் 95 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.