• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

June 23, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்

தமிழகத்தில் ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அதிக பட்சமாக சென்னையில் 1,380 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்றல் இன்று 39 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 1,887 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,3 39 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 25 148 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 9,44,352 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தேதியில் 28,428 சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் படிக்க