• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரேநாளில் 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

June 20, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 2,396 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று புதிதாக 2,396 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் புதிதாக 1,254 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 38 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.இதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில்,இன்று மொத்தம் 1,045 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 31,316 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், இதுவரை இல்லாத அளவாக இன்று 33 231 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 24,822 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் படிக்க