• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்!

May 20, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

2018 – 19 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்,

‘ வரும், 2019-20 ம் கல்வியாண்டிற்கு, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஒரு சீருடையும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இன்னொரு சீருடையும் அறிமுகம் ஆகிறது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கரும்பச்சை நிற வண்ணத்தில் கால் சட்டையும், இளம் பச்சை நிறமுள்ள கட்டமிடப்பட்ட மேல் சட்டையும் வழங்கப்பட உள்ளன. அதைபோல் 6ம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சந்தன நிற வண்ணத்தில் கால் சட்டையும், சந்தன நிற கட்டமிடப்பட்ட மேல் சட்டையும் வழங்கப்பட உள்ளன.மேலும், புதிய பள்ளிச் சீருடைகள், மாணவ, மாணவியரின் மனதை கவரும் என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க