• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனம் ! யார் இவர் ?

September 30, 2017 தண்டோரா குழு

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் இருந்து வந்தார். இந்நிலையில் தமிழகம், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று(செப்.,30) உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, தமிழக புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஷித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது மேகாலயா ஆளுநராக இருந்து வருகிறார்.

யார் இந்த பன்வாரிலால் புரோஹித்?

பன்வாரிலால் புரோஹித், மகாராஷ்டிர மாநிலம், விதர்பா பகுதியில் 1940 ம் ஆண்டு ஏப்ரல் 16 ம் தேதி பிறந்தவர். இவர் அசாம் ஆளுநராக பணியாற்றி உள்ளார். நாக்பூர் லோக்சபா தொகுதியில் இருந்த 3 முறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர்.

துவக்கத்தில் அகில இந்திய பார்வர்டு கட்சியில் சேர்ந்து பணியாற்றிய இவர் பின்னர் காங்கிரசில் இருந்து 1991 ல் பா.ஜ.,வில் இணைந்தார்.

இதுமட்டுமின்றி 1911-ம் ஆண்டு கோபால கிருஷ்ண கோகலே தொடங்கிய, 100 ஆண்டு கால பராம்பரியம் கொண்ட ‘தி ஹிடவதா’ பத்திரிகையின் தற்போதைய நிர்வாக ஆசிரியர் பன்வாரிலால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு புதிய துணைநிலை ஆளுநராக தேவேந்திர குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். அதைப்போல் மேகாலயா ஆளுநராக கங்கா பிரசாத், அசாம் ஆளுநராக ஜெகதீஷ் முகி, அருணாச்சல பிரதேச ஆளுநராக பி.டி.மிஸ்ரா, பீஹார் ஆளுநராக சத்யபால் மாலிக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க