• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்திற்கு ஒரு தலைவன் தேவை, அந்த இடத்தை நிரப்ப நான் வருகிறேன்  –  ரஜினிகாந்த்

March 5, 2018 தண்டோரா குழு

தமிழகத்திற்குஒரு தலைவன் தேவை, அந்த இடத்தை நிரப்ப நான் வருகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலையை திறந்துவைக்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து,  இன்று ரஜினிகாந்த் எம்.ஜி.ஆர்.சிலையை திறந்து வைத்தார். பின், எம்.ஜி.ஆரின் சிலையைத் திறந்துவைத்த நடிகர் ரஜினிகாந்த், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சிலைத்திறப்புக்குப் பின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய , நடிகர் ரஜினிகாந்த்,

மக்களுக்கு இடையூறாக பேனர் வைக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறிவிட்டோம். மக்களே எங்களை மன்னித்துவிடுங்கள்.எம்ஜிஆர் சிலை திறப்பதற்கான தகுதி எனக்கு உள்ளதா என்று தெரியவில்லை. எனக்கும், எம்ஜிஆருக்கும் இடையோன உறவை கூற விரும்பினேன், ஆனால் காலம் அமையவில்லை. பல்கலைக்கழக விழா, கட்சி மாநாடு போல மாறிவிட்டது.தமிழக அரசியல்வாதிகள் தங்கள் வேலையை சரியாக செய்யாததால் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். நான் என் வேலையை சரியாக செய்து வருகிறேன், 1996 முதல் அரசியல்வாதிகள் அவர்களது வேலையை சரியாக செய்யவில்லை. மக்களுக்கு நான் கடமை செய்ய வேண்டியுள்ளதால் தான், நான் அரசியலுக்கு வந்தேன். சாதி, மதமற்ற நேர்மையான அரசியலே ஆன்மிகஅரசியல்; உண்மையான ஆன்மிக அரசியலை இனி தான் பார்ப்பீர்கள். அரசியல் பாதை எனக்கும் தெரியும், பூ பாதை அல்ல. முள், கல், பாம்புகள் உள்ள பாதை.  கருணாநிதி, சோ ஆகியோரிடம் பேசி அரசியல் கற்றேன். அப்படித்தான் நான் அரசியலுக்கு வந்தேன்.நான் அரசியலுக்கு வந்ததை வாழ்த்த வேண்டாம், ஏளனம் செய்யாதீர்கள்.தலைவர்கள் என்றால் ஜெயலலிதாவும், கருணாநிதியும் மட்டுமே, அவர்களின் வெற்றிடத்தை நிரப்பவே வருகிறேன்.   தமிழகத்திற்கு ஒரு தலைவன் தேவை, அந்த இடத்தை நிரப்ப நான் வருகிறேன்.ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கிறார் என்றார்.

மேலும் படிக்க