• Download mobile app
12 May 2024, SundayEdition - 3014
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தின் உள் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கன மழைக்கு வாய்ப்பு

May 11, 2019 தண்டோரா குழு

தமிழக உள் மாவட்டத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”சென்னையில் வெப்பம் இன்று (மே. 11)வெப்பம் அதிகரிக்கும். திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெயில் சுட்டெரிக்கும். வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட 14 உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், கரூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், உள் மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டத்தில் 4 சென்டி மீட்டர் மழையும், தேனி மாவட்டதில் 3 சென்டி மீட்டர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க