March 18, 2019 தண்டோரா குழு
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சின்னம் ஒதுக்கி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யுனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுக, பாமக, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் களம் காணும் காட்சிகள் ஒவ்வொரு கட்சியும் தனது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வருகிறன்றனர். இவ்வேளையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி ஒதுகப்பட்டுள்ளது. தமாக தனது வேட்பாளர் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் தஞ்சாவூர் தொகுதியில் தமாகா சார்பில் என்.ஆர்.நடராஜன், தனி சின்னத்தில் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.