கோவை இ.எஸ்.ஐ., டீன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியான பத்திரிக்கை செய்திக்கு மறுப்பு தெரிவித்து டீன் ரவீந்திரன் விளக்கம் அளித்தார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இ.எஸ்.ஐ., மருத்துவமனை டீன் ரவீந்திரன்,
30 ஆண்டுகளாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியராக பணியாற்றி வந்த நிலையில், ஊட்டியில் பணி உயர்வு பெற்று பணியாற்றி, பின்பு, பணி மாறுதலாகி கோவை இ.எஸ்.ஐ., மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறேன். நான் வந்த பிறகு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 140 ஆக குறைந்துள்ளது. 530 ஆக இருந்த படுக்கை வசதிகளை ஆயிரத்து 250 படுக்கைகளாக 90 நாட்களில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியினார்.
மேலும், உயிரை கொடுத்து சொந்த மருத்துவமனை போல் நினைத்து பணியாற்றி வருவதாகவும், அவ்வாறு இருக்கும்போது, குறிப்பிட்ட பத்திரிக்கை ஒரு குற்றச்சாட்டு வெளியிடுவதாகவும், எதுவாக இருந்தாலும் தகுந்த ஆதாரங்களுடன் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்போம் என்றார். அதில், சடலத்தை எடுக்க ரூ.3 ஆயிரம் கேட்பதாக தெரிவிக்கப்பட்ட புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும், முன்னரிமை அடிப்படையில் பணி பெற்றபோது, முன்னாள் அமைச்சர் தயவால் பணி ஆணை பெற்றதாக செய்தி வெளியிட்டது மன வேதனை அடைந்ததால் இந்த விளக்கம் அளிக்கிறேன்.
இதுதொடர்பாக பிரஸ் கவுன்சில் செல்ல உள்ளேன் என்றவர், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் PAID ATTENDERS அல்லது HOME NURSE முறை உரிய அனுமதி பெற்றே அனுமதிக்கப்படுவதாகவும், ஆள் பற்றாக்குறையால் தான் இது அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது