January 14, 2019
தண்டோரா குழு
தனிநபர் வருமான உச்சவரம்பை 2.5 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகல்வல்கள் வெளியாகியுள்ளன.
தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை, மத்திய அரசு ரூ.5 லட்சமாக உயர்த்தயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்றத்துக்கு விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற வுள்ளதால், வழக்கம்போல் இந்த முறை பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படமாட்டாது. அதற்கு பதிலாக, வரும் பிப்ரவரி 1 -ஆம் தேதி மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.
அதில் முக்கிய அம்சமாக, தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை தற்போதுள்ள 2.5 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது 60 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 10 சதவீதமும், ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20 சதவீதம் மற்றும் ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் வருமான வரி விதிக்கப்பட்டு வருகிறது.