• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

January 12, 2017 தண்டோரா குழு

தனியார் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் வருடாந்திர கணக்கை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனியார் தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து பெறும் நிதிக்கு முறையான கணக்கு காட்டப்படுவதில்லை என்கிற புகாரை சமூக ஆர்வலர்கள் கூறி வந்தனர். மேலும் இதற்கான வழிமுறைகளை உருவாக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

“முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் பெறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியைக் கண்காணிக்க எந்த வழிமுறையையும் உருவாக்காதது ஏன்?” என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.

இதையடுத்து, வெளிநாட்டு நிதி உதவி பெறும் அனைத்து தொண்டு நிறுவனங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

அதில், “தனியார் தொண்டு நிறுவனங்கள், 2014-15 ம் நிதியாண்டு முதல் தங்களது வருடாந்திர கணக்கை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய வழக்கப்படி, காகித வடிவில் தாக்கல் செய்யப்படும் கணக்குகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது” என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க