• Download mobile app
22 Mar 2026, SundayEdition - 3693
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

January 12, 2017 தண்டோரா குழு

தனியார் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் வருடாந்திர கணக்கை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனியார் தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து பெறும் நிதிக்கு முறையான கணக்கு காட்டப்படுவதில்லை என்கிற புகாரை சமூக ஆர்வலர்கள் கூறி வந்தனர். மேலும் இதற்கான வழிமுறைகளை உருவாக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

“முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் பெறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியைக் கண்காணிக்க எந்த வழிமுறையையும் உருவாக்காதது ஏன்?” என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.

இதையடுத்து, வெளிநாட்டு நிதி உதவி பெறும் அனைத்து தொண்டு நிறுவனங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

அதில், “தனியார் தொண்டு நிறுவனங்கள், 2014-15 ம் நிதியாண்டு முதல் தங்களது வருடாந்திர கணக்கை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய வழக்கப்படி, காகித வடிவில் தாக்கல் செய்யப்படும் கணக்குகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது” என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க