• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தனியார் இருசக்கர டாக்சிகளை அனுமதிக்க கூடாது – ஆட்டோ ஓட்டுனர்கள் அரசுக்கு கோரிக்கை

April 22, 2019 தண்டோரா குழு

தனியார் இருசக்கர டாக்சிகளை அனுமதிக்க கூடாது என ஆட்டோ ஓட்டுனர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கால் டாக்சி உள்ளிட்டவை உள்ளன. ஏற்கனவே சில கால் டாக்சிகளில் ஆட்டோவை விட கட்டணம் குறைவு என்பதால் மக்கள் ஆட்டோவிற்கு பதில் கால் டாக்சிகளையே அதிக அளவு பயன் படுத்தி வருகின்றனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக ஆட்டோ ஓட்டுனர்கள் அரசிடம் புகார் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் ராபிட்டோ இருசக்கர டாக்சிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் மேலும் கேள்வி குறியாகும் அதனால் தனியார் இருசக்கர டாக்சிகளுக்கு வழங்கிய அனுமதியை திரும்ப பெற வேண்டும். மேலும் ஓன் போர்டு வாகனங்களை பொது மக்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது என்பது மோட்டார் வாகன சட்டம் என்று கோவை ஆட்டோ ஓட்டுனர்கள் கூறுகின்றனர்

மேலும் படிக்க