May 19, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட
பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சி கிழக்கு
மண்டலத்திற்குட்பட்ட காளப்பட்டி பகுதியில் நேரு நகர்,இளங்கோ நகர்,பிள்ளையார் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை மாநகராட்சி கமிஷனர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிப்பவர்களுக்கு தேவையான அந்தியாவசிய
பொருட்களான காய்கறி, மளிகை, பால் போன்ற பொருட்கள் கிடைக்க பெறுகிறதா? என மக்களிடம் கேட்டறிந்தார்.பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட காலம்
முடியும் வரை யாரும் வீட்டை வீட்டு வெளியே வரவேண்டாம் எனவும், வீட்டில் உள்ள அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது,மண்டல சுகாதார அலுவலர் சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.