• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தண்டனை காலம் முடிந்து 3 ஆண்டுகள் சிறையிலிருந்த கைதுக்கு நஷ்டயீடு தர நீதிமன்றம் உத்தரவு

July 22, 2017 தண்டோரா குழு

சிறை தண்டனை காலம் முடிந்த பிறகும், 3 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதிக்கு நஷ்டஈடு தர வேண்டும் என்று மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஔரங்காபாத் நகரை சேர்ந்த தரஞ்சித் சிங் கொலை குற்றத்திற்காக கடந்த 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு பின், மும்பை அமர்வு நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. எனினும், மும்பை உயர்நீதிமன்றத்தில், குற்றவியல் முறையீடு மூலம் மாநில அரசு மேல்முறையீடு செய்தது.

இதையடுத்து, 1981-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை காலம் முடிந்த பிறகும், சிறை அதிகாரிகள் அவரை விடுவிக்கவில்லை. தண்டனை காலத்தோடு மேலும் 3 ஆண்டுகள் அவரை சிறையில் வைத்திருந்தனர்.

அதன் பிறகு வெளிய வந்த அவர், சிறைகாலம் முடிந்த பிறகும், தன்னை சிறையில் வைத்திருந்த அதிகாரிகள் மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஔரங்காபாத் பெஞ்ச் நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தனர். விசாரணையின் முடிவில், சிறைத்தண்டனை காலம் முடிந்த பிறகும், கைதியை 3 ஆண்டுகள் சிறையிலேயே வைத்திருந்த குற்றத்திற்காக, அவருக்கு நஷ்டயீடாக 2 லட்சம் ரூபாயை 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று தீர்பளித்தனர்.

மேலும் படிக்க