• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தட்டச்சு மற்றும் கணிணி பயிற்சி மையங்களை மீண்டும் திறக்க அனுமதி மாவட்ட ஆட்சியரிடம் மனு

May 26, 2020 தண்டோரா குழு

தட்டச்சு மற்றும் கணிணி பயிற்சி மையங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்க கோரி கோவை மாவட்ட தட்டச்சு மற்றும் கணிணி பள்ளிகள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று நோயை கட்டுபடுத்த வேண்டி மத்திய மாநில அரசுகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் அனைத்து சேவைகளும் கடந்த இரண்டு மாதங்களாக முடக்கப்பட்டு இருந்தன.இந்நிலையில் சென்னையை தவிர கோவை உட்பட சில மாவட்டங்களில் கொரோனா கட்டுபடுத்தப்பட்டுள்ளதால் மாநில அரசு சில தளர்வுகளை அறிவித்திருந்தது. அதன் படி கோவையில் தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் தட்டச்சு மற்றும் கணிணி பயிலங்களை மீண்டும் திறக்க கோரி தட்டச்சு மற்றும் கணிணி பள்ளிகள் சங்கம் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியர் இராசமணியிடம் மனு அளிக்கப்பட்டது.

IMG-20200525-WA0096

மாநில தலைவர் கலைவாணன் மற்றும் கோவை மாவட்ட தலைவர் கண்ணையன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து வழங்கிய மனுவில் அரசின் உத்தரவுப்படி சமூக விலகலை கடைபிடித்து பயிற்சி மையங்களை தொடர்ந்து நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பட்டு இருந்தனர்.

மேலும் படிக்க