• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு..? கோவையில் போலீசார் திடீர் சோதனை..!

July 15, 2019

கோவையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோவை மாநகர போலீசார் மூன்று இளைஞர்களின் வீடுகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் மத கலவரத்தை தூண்டும் விதமாக சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருவதாகவும் கோவையின் ஒரு சில பகுதிகளை சேர்ந்த இளைஞர்களின் வீடுகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவ்வப்போது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் போலீசாரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை உக்கடம், குனியமுத்தூர், போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், இதேபோன்று சமூக வலைதளங்கள் மூலம் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கோவை கரும்புக்கடை அடுத்த சாரமேடு பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன், உக்கடம் ஜி எம் நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ பைசல், பீளமேடு அடுத்த சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பர்கான் உள்ளிட்ட 3 பேரின் வீடுகளில் உதவி ஆணையர்கள் தலைமையிலான தனிப்படை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சோதனையின் போது அவர்களின் வீடுகளில் உள்ள கணினி, லேப்டாப், செல்போன்கள், டைரிகள், பென்டிரைவ்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் எலக்ட்ரானிக் டிவைஸ் என்று சொல்லப்படும் ஆவணங்கள் சிலவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. சோதனையை அடுத்து மூன்று பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க