• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தடை உத்தரவு எதிரொலி ஆன்லைனில் மாடுகள் விற்பனை

June 2, 2017 தண்டோரா குழு

ஓ.எல்.எக்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் சந்தைகளில் மாடுகள் விற்பனை செய்ய விளம்பரங்கள் அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யகூடாது என்று மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை குறித்து நாடு முழுவதும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், உழவர்களும் கால்நடை வர்த்தகர்களும் டிஜிட்டல் விற்பனை இடமான ஓஎல்எக்ஸ் மூலம் மாடுகளை விற்கத் தொடங்கியுள்ளனர். 1௦,௦௦௦ ரூபாய் முதல் 3௦௦,௦௦௦ ரூபாய் வரை ஓ.எல்.எக்ஸ் மூலம் நூற்றுக்கணக்கான மாடுகள் விற்கப்படுகிறது.

மே 26ம் தேதி, வட கிழக்கு இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் கேரளா மாநிலம் தவிர்த்து, இந்திய முழுவதிலும் மாடுகள் விற்பனை செய்வதை தடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விலங்குகளின் சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் புதிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் புதுபிக்கப்பட்டது.

இந்திய முழுவதிலும் விவசாய நில உரிமையாளர்களுக்கு மட்டுமே மாடுகளின் வியாபாரம் அனுமதிக்கப்பட்டது. வேளாண்மை மீது தாக்குதல் என்னும் புதிய ஆட்சியை விவசாய்கள் பார்த்து வருகின்றனர். இந்த விதிகள் அடுத்த மூன்று மாதங்களில் செயல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மே 26ம் தேதி முதல், ஓ.எல்.எக்ஸ் மற்றும் குய்க்கிர்(Quikr) போன்ற ஆன்லைன் சந்தைகள் மாடு விற்பனை விளம்பரத்தால் நிரம்பியுள்ளனர்.

மேலும் படிக்க