• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் சசிகலாவை சந்தித்த டிடிவி தினகரன் – திடீர் சந்திப்பு ஏன்?

December 17, 2018 தண்டோரா குழு

சில நாட்களாகவே அமமுக கட்சியில் பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்கும் நிலையில் டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் இன்று திடீரென சசிகலாவை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரிலுள்ள பரப்பன அஹ்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை டிடிவி தினகரன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ க்கள் இன்று சந்தித்தனர். சுமார் 20 நிமிடம் இவர்கள் சசிகலாவுடன் உரையாடினார்கள். அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி விலகி உள்ள நிலையில் திடீரென்று
இந்தசந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதற்கிடையில், இந்த சந்திப்புக்கான காரணம் என்ன? கட்சி நிர்வாகிளுடன் இந்த சந்திப்புஏன்? என்று அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக பெங்களூரில் அவர் அளித்த பேட்டியில்,

என்னுடைய வளர்ச்சியை பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள். ஆளும் கட்சி மட்டுமில்லாமல் எதிர்க்கட்சியும் எங்களை பார்த்து பயப்படுகிறார்கள் அமமுகவில் யாரும் அதிருப்தியில் இருப்பதுபோல தெரியவில்லை. ஒருசிலர் அமமுகவை விட்டுசென்றதால் எந்தபாதிப்பும் இல்லை. ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வீண் வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. சிலர் விலகிவிடுவதால் கட்சிபோய்விடும் என்றால், உலகத்தில் எந்தகட்சியும் இருக்காது. அதுமட்டுமின்றி, 6 மாதமாக சசிகலாவை யாரும் சந்திக்கவில்லை, அதனால் பார்க்க வந்தோம். எல்லோரும் சசிகலாவை பார்க்க ஆசைப்பட்டோம் அதனால் தான் இந்த நிகழ்வு. அமமுகவின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. என்னுடைய விஸ்வரூபத்தை யாராலும் தடுக்க முடியாது. செந்தில் பாலாஜி நான்கு மாதங்களுக்கு முன்பே வெளியேற முடிவெடுத்துவிட்டார். அப்போதே என்னிடம் சிலர் இதுகுறித்து தெரிவித்தனர். ஆனால் நான் நம்பவில்லை.

தினமும் அமமுகவை விட்டு பலர் வெளியே செல்வதாக செய்திகள் வருகிறது. தினமும் 1000 பேர் சென்றுவிட்டார், 2000 பேர் சென்று விட்டார்கள் என்று கூறுகிறார்கள் எல்லாம் பொய். எங்கள் கட்சியில் ஒருகோடி பேர் இருக்கிறார்கள். அந்த அதிர்ச்சியில் விஷமிகள் இப்படி பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்.
நாங்கள் தான் வெற்றி அதிமுகவினர் தோல்வி அடைந்த பிறகு எங்களிடம் வந்தால் சேர்த்துக்கொள்ளமாட்டோம். வரவேண்டும் என்றால் இப்போதே எங்களிடம் வந்து சேர்ந்துவிடுங்கள். நாங்கள் தான் இடைத்தேர்தலில் வெற்றிபெறபோகிறோம் என்று அதிமுக, திமுக, பாஜக, உளவுத்துறை என்று எல்லோருக்கும் தெரியும். அதனால் இப்போதே எங்களிடம் வந்து விடுங்கள் என்று டிடிவிதினகரன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க