• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ட்விட்மூலம் கடத்தப்பட்ட குழந்தைகள் மீட்பு

May 24, 2017 தண்டோரா குழு

ஒடிசா மாநிலத்தில் ஒருவர் அனுப்பிய ட்விட்டர் பதிவால் கொத்தடிமை வேலைக்கு கடத்தப்பட்ட நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டருக்கு,

“பர்ஹாம்பூரிருந்து சம்பல்பூர் செல்லும் பேருந்து ஒன்றில் நான்கு சிறுவர்களை வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்படுகின்றனர். அனேகமாக, அவர்கள் கொத்தடிமைகளாக கொண்டு செல்லப்படலாம் என்று அப்பேருந்தில் பயணம் செய்த அமித் நந்தா என்பவர்,அம்மாநில முதல்வர்
அலுவலகத்தின் முகவரிக்கு ட்விட்டர் மூலம் புகார் அனுப்பினார்.

அந்த புகாரைக் கண்ட அதிகாரிகள், அதை விளையாட்டாக எண்ணாமல், உடனே காவல்துறையினருக்கு தகவல் தந்தனர். பர்ஹாம்பூரிருந்து சம்பல்பூர் செல்லும் அனைத்து பேருந்துகளையும் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது, புல்பானி என்னும் இடத்தில் கடத்தப்பட்ட நான்கு சிறுவர்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். அதோடு குழந்தைக் கடத்தலில் ஈடுப்பட்ட மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் குழந்தைகளைக் கடத்தி சென்றதுக் குறித்து புகார் தெரிவித்த அமித் நந்தாவையும்,குழந்தைகளை காப்பற்றிய காவல்துறையினருக்கும் நவீன் பட்நாயக் தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

மேலும் படிக்க