• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ட்ரோன் குறித்து கல்லூரி மாணவர்களிடையே தேசிய அளவிலான மாநாடு

September 2, 2022 தண்டோரா குழு

கோவை பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரியில், வளர்ந்து வரும் சமீப தொழில்நுட்பமான ட்ரோன் குறித்து கல்லூரி மாணவர்களிடையே தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் ஜெட் ஏரோஸ்பேஸ் உடன் இணைந்து பிஎஸ்ஜி ட்ரோன் ஆராய்ச்சி ஆய்வகம், ட்ரோன் குறித்த வளர்ந்து வரும் சமீப தொழில் நுட்பங்கள் பற்றியான தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது.

பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் கிரிராஜ் ஒருங்கிணைத்த இதில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்த மாநாட்டில் பாதுகாப்பு துறைக்கு பயன்படும், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ட்ரோன்கள், அதே போல் விவசாயம் துறைக்கு பயன்படும் மருந்து தெளிப்பான், உரமிடுதல்,மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு பயன்படுத்தபடும் தகவல் தொடர்பு அமைப்புகள், தன்னியக்க அமைப்புகள், உயிரியல் மருத்துவம்,உள்ளிட்ட ட்ரோன் குறித்த போஸ்டர் விளக்க காட்சியும் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சர்வதேச வெப்ப ஓட்ட ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அசுதோஷ் தத் சர்மா,மற்றும் துணை தலைவர் நரேந்திர கவுர் கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் குறித்து விளக்கினர்.

மேலும் படிக்க