• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டேன்ராம் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மதிய உணவு மற்றும் ஆக்சிஜன் செறிவுட்டிகள் வழங்கல்

May 28, 2021 தண்டோரா குழு

டேன்ராம் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அதன் தலைவர் டேன்ராம் வழிகாட்டுதலின் படி கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு மதிய உணவு மற்றும் ஆக்சிஜன் செறிவுட்டிகள் வழங்கப்பட்டன.

தன்னார்வலர் டன்ராம் ஒரு சர்வதேச அளவிலான பேச்சாளர், நிகழ்ச்சியாளர், பயிற்சியாளர். பொரும்பாலும் பல ஆண்டுகளாக ஐரோப்பா, அமெரிக்கா,துபாய் போன்ற நாடுகளில் இருப்பார்.தொற்றின் ஆரம்ப காலத்தில் வெளிநாடு செல்ல இயலாமல், தனது பெற்றோருடன் இந்தியாவில் மாட்டிக் கொண்டார்.இவரது தந்தை ராமமூர்த்தி, ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரி, அதோடு ஓய்வு பெற்ற மென்பொருளாரும் ஆவார்.இந்த தொற்று நோய் சூழலில் தங்களால் இயன்றதை ஏதாவது செய்ய வேண்டும் என டன்ராம் எண்ணினார். ஆரம்பத்தில் கோவை அரசு மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு 100 உணவுகளை வழங்கினார்.

ஒரு மருத்துவர் அளித்த ஆலோசனையின்படி, ஆரம்ப நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 40 மருத்துவ உதவிகளை,அவர்கள் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெறும் வகையில் வழங்கினார். டான்ராமின் உதவி செயலாளர் ஜெஸ்ஸி ஜான் மற்றும் அவரது குடும்பத்தினரும் இணைந்து, ஓய்வின்றி பணியாற்றினர். மருத்துவ பொருட்கள், உணவு போன்றவைகளை
அவர்களது வீட்டிற்கு மற்றும் மருத்துவமனைகளுக்கு சென்று கடந்த ஒரு மாதகமாக வழங்கி வருகின்றனர்.

இந்த தகவல்களை சமுக ஊடகங்களில் பதவிட்ட டன்ராமுக்கு,சர்வதேச அளவிலிருந்து உதவிகள் வரத்தொடங்கின.கடந்த இரண்டு வாரங்களில் அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் ஒவ்வொரு நாளும் 200 உணவுகளை வழங்கி வருகின்றனர். நோயாளிகளுக்கு மருத்துவ உதவியளித்தல், ஏழை எளிய குடும்பங்களுக்கு உதவி செய்தல், இரண்டு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவுட்டிகளை வழங்குதல் போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம்,முகநூலில், லிங்க்டு இன் ஆகியவற்றில் @ iamdanram என்ற உள்ளீட்டில் தொடர்பு கொண்டு, பணிகளை பார்வையிட்டு உதவலாம். நன்கொடைகள், உதவிகள் அளிக்க www.iamdanram.com/indiacovidrelief என்ற இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க