• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெஸ்லா காரின் மென்பொருளை ஹேக் செய்தால் 7 கோடி பரிசு

January 17, 2019 தண்டோரா குழு

உலகின் அதிநவீன கார் நிறுவனத்தின் மென்பொருளை ஹேக் செய்தால் ரூ.7 கோடிபரிசு வழங்கப்படும்.மேலும் இதில் முதல் பக் கண்டுபிடிக்கும் மென்பொருள் பொறியாளருக்கு ஒரு டெஸ்லா கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2003ம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் துவங்கப்பட்டது உலகின் அதிநவீன எலக்ட்ரிக் கார் டெஸ்லா. இந்த கார் எரிபொருள் இல்லாமல் முற்றிலும் மின்சாரத்தை கொண்டு இயங்கும். டெஸ்லா உலக செவந்தர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றது. தற்போது டெஸ்லா கார் நிறுவனம் புது அறிவிப்பை ஒன்று வெளியுட்டுள்ளது. அதில் டெஸ்லா காரின் மென்பொருளை ஹேக் செய்தால் ரூ.7 கோடி பரிசு வழங்கப்படும் மற்றும் முதல் பக் கண்டுபிடிக்கும் மென்பொருள் பொறியாளருக்கு ஒரு டெஸ்லா கார் பரிசாக வழங்கப்பட உள்ளது என டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

2007ம் ஆண்டு துவங்கி Pwn2Own என்ற நிகழ்ச்சி வருடம் தோறும் டெஸ்லா நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வருடா வருடம் தயாரிக்கப்படும் டெஸ்லா காரில் பல முக்கிய தொழிநுட்ப மற்றும் மென்பொருள் மேம்பாடுகள் செய்யப்படும். இவற்றில் குறை கண்டுபிடிக்கும் மென்பொருள் ஆய்வாளர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பரிசளிக்கப்படும்.இவ்வாறாக குறைகள் அனைத்தும் போக்கிக்கொள்ளப்படும். இதன் மூலம் டெஸ்லா நிறுவனம் தன் தரத்தை உயர்த்திக்கொள்கிறது.
முன்னதாக 2013ம் ஆண்டு 18 பக்கை கண்டுபிடிக்கும் மென்பொருள் ஆய்வாளர்களையும் 2014ல் 7 ஆய்வாளர்களையும் 2016ல் 2 ஆய்வாளர்களையும் டெஸ்லா கண்டறிந்தது. இவர்களுள் இருவருக்கு மட்டுமே டெஸ்லா கார் பரிசளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க