• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லியில் துணை முதல்வர் கைது : கோவையில் ஆர்ப்பாட்டம்

February 27, 2023 தண்டோரா குழு

டெல்லி துணை முதலமைச்சர் கைதுக்கு கண்டனம் தெரிவித்து கோவையில் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆஜராகும்படி சிபிஐ அவருக்கு சம்மன் அனுப்பியது. ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி, அவரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக இன்று 8 மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு கைது செய்தது.

இவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு டெல்லி துணை முதலமைச்சர் கைது செய்த மத்திய அரசை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மண்டல பொறுப்பாளர் வாமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க