• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 1000 களப்பணியாளர்கள்

November 2, 2021 தண்டோரா குழு

மழைநீர் தேங்கி டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க மாநகராட்சி சார்பாக 100 வார்டுகளிலும் களப்பணியில் ஈடுபட 1000 பணியாளர்களை மாநகராட்சி நியமித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்

‘கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகள், கட்டிடங்களில் மழைநீர் தேங்குவது, கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் சோதனை மேற்கொள்ள 1000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இப்பணியாளர்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக உள்ளவர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருத்தும் தெளிப்பார்கள். வார்டுக்கு 10 பேர் விதம் இப்பணியில் ஈடுபட உள்ளனர் ‘என்றார்.

மேலும் படிக்க