• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டி.டி.வி. தினகரனுக்கு 28 லட்சம் அபராதம்- கோர்ட் உறுதி

January 6, 2017 தண்டோரா குழு

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் உறவினர் டி.டி.வி. தினகரனுக்கு அந்நியச் செலவாணி மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட 28 லட்சம் ரூபாய் அபராதத்தை சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 6) உறுதி செய்தது.

1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. அந்த நேரத்தில், ‘தான் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமை பெற்றவன்’ என்று தினகரன் வாதிட்டார். அந்த வாதத்தை ஏற்க மறுத்த அமலாக்கத் துறை அவருக்கு ரூ. 28 லட்சம் அபராதம் விதித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் டிடிவி தினகரன். இந்த மனு நீதிபதி மகாதேவன் தலைமையிலான பெஞ்ச் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். டி.டி.வி. தினகரனுக்கு விதிக்கப்பட்ட 28 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது சரியே என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும் படிக்க