• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்திலை கைது செய்ய அக்டோபர் 4ஆம் தேதி வரை தடை

September 19, 2017

டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்திலை அக்டோபர் 4ஆம் தேதி வரை கைது செய்ய உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது.

தினகரனின் ஆதரவாளரான நடிகர் செந்தில், தன்னை விமர்சனம் செய்து மிரட்டல் விடுப்பது போல் பேசி வருவதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி எம்.பி.குமார் காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்தில் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கினை ரத்து செய்யக்கோரி நடிகர் செந்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, தினகரன் மற்றும் செந்திலை அக்டோபர் 4ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும் படிக்க