• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிடிவி தினகரன்பொதுக் கூட்டத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளைஅனுமதி

August 11, 2017 தண்டோரா குழு

மதுரை மாவட்டம் மேலூரில் வரும் 14 -ம் தேதி டிடிவி தினகரன் கலந்துகொள்ள உள்ள பொதுக் கூட்டத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தினகரன் ஆதரவாளர் ஒருவர் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அம்மனுவில், ஆகஸ்ட் 14-ம் தேதி மதுரை மேலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் டிடிவி தினகரனும் பங்கேற்க உள்ளார்.

இந்தக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கியோ அல்லது மனுவை நிராகரித்தோ காவல்துறை சார்பில் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எனவே பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்,” என கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது பொதுகூட்டத்திற்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க