• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிடிவி. தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு

June 15, 2017 தண்டோரா குழு

அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனுடன் மேலும் 2 அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதனிடையே சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி. தினகரனை அதிமுக எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள் கடந்த சில நாட்களாக சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே போல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோர் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இதுவரை 32 எம்.எல்.ஏ.க்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அம்பத்தூர் எம்.எல்.ஏ. அலெக்சாண்டர், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்னசபாபதி ஆகிய இருவரும் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தற்போது தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க