• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிக் டாக் செயலியை தடைசெய்ய எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி கோரிக்கை – அமைச்சர் பதில்

February 12, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் பேசிய அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.

டிக்-டாக் என்ற செயலியின் மோகம் தற்கால இளைஞர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்த செயலியில் இளைஞர்கள், தங்களுக்கு பிடித்தமான நடிகர்களின் வசனங்களுக்கு ஏற்றவாறு நடித்து, அந்த வீடியோக்களை வெளயீட்டுக் கொண்டு வருகின்றனர். இதிலும் சிலர் ஆபாசமான வீடியோக்களையும், சட்டவிதிகளுக்கு புறம்பாகவும் வீடியோக்களை வெளியிடுகின்றனர். இந்த செயலியினால் பலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.தமீமுன் அன்சாரி, பல்வேறு ஆபாச செயலுக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கும் வழிவகுப்பதால் #TikTok செயலியை தமிழகத்தில் தடை செய்ய அரசு ஆராய வேண்டும். மேலும், கலாச்சாரத்தை சீரழிக்கும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மணிகண்டன், டிக்டோக் செயலி மூலமாக கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது என பொதுமக்கள், அரசியல் தலைவர்களிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த விவகாரத்தை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். புளுவேல் கேமை போன்று டிக் டாக்கையும் தடைசெய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் படிக்க