December 13, 2018
தண்டோரா குழு
டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓமலூர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த விஷ்ணுப்பிரியா, அதே ஆண்டு, நவம்பர் மாதம் 25ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார்கள் எழுந்த நிலையில், குற்றவாளிகள் யாரும் இல்லை எனவும், இந்த வழக்கை கைவிடுவதாகவும் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ கடந்த ஏப்ரல் 16-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது.
இதை எதிர்த்து விஷ்ணுப்பிரியாவின் தந்தை ரவிக்குமார் தொடர்ந்த ஆட்சேபனை மனுவை விசாரித்த கோயம்புத்தூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நாகராஜ் இன்று தீர்ப்பளித்தார். அதில்,மே மாதம் சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையை தள்ளுபடி செய்வதாகவும் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.