• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாஸ்மாக்கை உடைத்து 62 மதுப்பாட்டில்கள் திருட்டு

July 15, 2023 தண்டோரா குழு

கோவை ஆவரம்பாளையம் சாலையில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 62 மதுப்பாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்கள்.

கோவை அண்டக்கா பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் காந்தி (43). இவர் கோவை ஆவரம்பாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக்கில் சூப்பரைசராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம் 12 மனிக்கு டாஸ்மாக் கடையை வழக்கம் போல் திறக்க வந்துள்ளார். அப்போது கடையில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடையின் உள்ளே சென்று பார்த்த போது மதுப்பாட்டில்கள் கலைந்து கிடைந்துள்ளது.

பின்னர் அவர் சோதனை செய்த போது சுமார் ரூ.10 ஆயிரத்து 400 மதிப்புள்ள 62 மதுபாட்டில்கள் திருடு போய் உள்ளது தெரியவந்தது. இதுகுறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க