• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாக்டர் சரோஜினி அகர்வாலுக்கு நீரஜா பானட் விருது

September 7, 2017 தண்டோரா குழு

சண்டிகரில் ஆதரவற்ற பெண்களுக்காக ‘மனிஷா மந்திர்’ என்னும் இல்லத்தை நடத்தி வரும் டாக்டர் சரோஜினி அகர்வாலுக்கு ‘நீர்ஜா பானோத்’ விருது வழங்கப்படுகிறது.

கடந்த 1986ம் ஆண்டு, பான் அமெரிக்கா விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது. இந்த விமானத்தில் பணிபுரிந்த நீரஜா பானட், பயணிகளை காப்பாற்றினார். ஆனால், தீவிரவாதிகள் நீர்ஜாவை சுட்டுக்கொன்றனர். அவருடைய வீர செயலின் நினைவாக ‘நீரஜா பானட் விருது’ ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, இவ்வாண்டு அந்த விருதை டாக்டர் சரோஜினி அகர்வால் பெறுகிறார்.இவர் கடந்த 1978ம் ஆண்டு, ஒரு விபத்தில் தன்னுடைய 8 வயது மகளை பரிதாபமாக இழந்தார். மகளை இழந்த துக்கத்தில் இருந்தாலும், ஆதரவற்ற பெண்களை கவனித்து கொள்வது என்று முடிவெடுத்தார்.

இதனையடுத்து, ‘மனிஷா மந்திர்’ என்னும் இல்லத்தை தொடங்கினார். ஆனால், தொடக்கத்தில் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. அதன் பிறகு, கடந்த 1986ம் ஆண்டு, செப்டம்பர் 24ம் தேதி முதன் அந்த இல்லம் வெற்றிகரமாக செயல்பட துவங்கியது.

தற்போது அந்த இல்லத்தில் சுமார் 7௦௦ பெண்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை, ஆகியவை மற்றும் கிடைப்பதில்லை, மாறாக அன்பும் கவனிப்பும் கிடைக்கிறது.

சரோஜினியின் இந்த தன்னலமற்ற செயலுக்காக, ‘நீரஜா பானட்’ வழங்கப்பட இருக்கிறது.இவ்விருதினை ஹரியானா ஆளுநர் கப்டன் சிங் சோலங்கி வழங்குகிறார். இந்த விருதுடன் ரூ 1,5௦,௦௦௦ ரூபாய் பரிசு தொகையும் மற்றும் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.

மேலும் படிக்க