January 25, 2019 தண்டோரா குழு
காரமடை, டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் மென்பொருள் சோதனை மற்றும் வகுப்பிற்;கான ஐந்து நாள்
பயிலரங்கம் நடைபெற்றது.
காரமடை உள்ள டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் மென்பொருள் சோதனை மற்றும் வகுப்பிற்கான ஐந்து நாள் பயிலரங்கம் 21.01.2019 முதல் 25.1.2019 வரை நடைபெற்றது. இந்நிகழ்வில் கணினி அறிவியல் துறைத்தலைவர் அ.சண்முகபிரியா வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர்.வே.சுகுணா தலைமையேற்று பயிலரங்கத்தை தொடங்கி வைத்தார்.
மேற்கு ஆப்பிhpக்கா, ப]ளூகிரெஸ்ட் பல்கலைக்கழகத்தின் ஐ.சி.டி.தலைவர் மற்றும் அசூர் ஐ.டி.நிறுவனத்தின் தலைமைப் பயிற்சியாளர் விபின் சந்தர் செல்வராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு மென்பொருள் சோதனைக்கான பயிற்சியை அளித்தார். அப்போது, மென்பொருள் சோதனை என்பதற்கான விளக்கங்கள், அதனுடைய முக்கியத்துவம், மென்பொருள் சோதனையின் வகைகள்ங போன்றவற்றிற்கான விளக்கங்களை அளித்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடைபெற்ற இப்பயிலரங்கத்தில் கலந்துகொண்ட மாணவர்களில் இணையதள வழியில் மென்பொருள் உருவாக்கும் சோதனைக்கான தேர்வு நடத்தப்பட்டது. கலந்து கொண்ட மாணவ, மாணவியர் அனைவருக்கும் சர்வதேச மென்பொருள் சோதனைக்கான சான்றிதழ் (ISTQB) சான்றிதழ்களை வழங்கும். பயிலரங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த மாணவர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இப்பயிலரங்கத்தின் நிறைவு நாளன்று கணினி அறிவியல்துறை உதவிப்பேராசிரியர் என்.சித்ரா நன்றியுரையாற்றினார்.