November 27, 2017
தண்டோரா குழு
ஜெயலலிதா வாரிசு என அறிவிக்கக்கோரி பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதா தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம்
தள்ளுபடி செய்தது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு எனக்கூறி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்பவர் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் டி.என்.ஏ. மரபணு சோதனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகாமல், நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன்…? என கேள்வி எழுப்பினார். அதற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக உச்ச நீதிமன்றத்தை அணுகியதாக அம்ருதா தரப்பு பதில் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜெயலலிதாவின் வாரிசு எனக்கூறி அம்ருதா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.