• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெர்மனி தேவாலையத்தில் ரோபோ ஒன்று பாதிரியாராக நியமனம்

May 31, 2017 தண்டோரா குழு

ஜெர்மனியில் உள்ள கிறிஸ்துவ தேவாலையம் ஒன்றில் ரோபோ ஒன்று பாதிரியாராக நியமிக்கப்பட்டுள்ளது. இது அங்குள்ள மக்களிடையே ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ரோபோக்களின் பயன்பாடு அனைத்து துறைகளிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஜெர்மனியில் தேவலாயம் ஒன்றில் ‘மார்டின் லூதர்’ என்பவர் நினைவாக ரோபோ ஒன்று பாதிரியாராக நியமிக்கப்பட்டுள்ளது.

மார்டின் லூதர் ஏற்படுத்திய சீர்திருத்தத்தின் 5௦௦-ம் ஆண்டு நினைவாக ரோபோ பாதிரியார் நியமிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரோபோவுக்கு ‘ப்ளேசஸ் யூ 2’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் போலிஷ் ஆகிய ஐந்து மொழியில் ஆசிர்வாதத்தை மக்களுக்கு வழங்குகிறது.

மேலும் பைபிளிலுள்ள வசனங்களையும் சொல்கிறது. ஆலயத்திற்கு இந்த ரோபோ தனது இரண்டு கைகளும் உயர்த்தி ‘கடவுள் உங்களை ஆசிர்வத்து காப்பாற்றுவாராக’ என்று ஆசி வழங்குகிறது. தேவைபட்டால் அந்த ஆசிர்வாத வார்த்தைகளை ப்ரிண்டாகவும் எடுத்துக்கொள்ள முடியும்.

“இந்த புதிய திட்டத்தை சிலர் வரவேற்றுள்ளனர். ஒரு இயந்திரதிடமிருந்தா ஆசிர் பெறுவது என்று வேறு சிலர் எண்ணுகின்றனர்” என்று அந்த தேவலாயத்திற்கு வரும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க