• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர். அலுவலகங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

November 10, 2017 தண்டோரா குழு

ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர். அலுவலகங்கள் மற்றும் தினகரன் உள்ளிட்டோர் வீடுகளில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடு அலுவலகம் என 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தியிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நமது எம்.ஜி.ஆர்.அலுவலகம்,ஜெயா டிவி சி.இ.ஓ விவேக்,அவரது சகோதரி கிருஷ்ணப்பிரியா,இளவரசியின் மகன் விவேக் வீடு, மன்னார்குடியில் உள்ள திவாகரன் வீடுமற்றும் அவரது கல்லூரி,சசிகலாவின் உறவினர் வெங்கடேஷ் வீடு,ஜாஸ் சினிமாஸ்,ஜெயலலிதாவின் மருத்துவர் சிவகுமார் இல்லம்,மற்றும் கொடநாடு எஸ்டேட் ஆகிய இடங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க