• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதா மரணம் தொடர்பான 24 வீடியோகள் அடங்கிய பென்டிரைவ் ஒப்படைப்பு

February 15, 2018 தண்டோரா குழு

ஜெயலலிதா மரணம் தொடர்பான 24 வீடியோ அடங்கிய பென்டிரைவ் விசாரணை ஆணையத்தில் சசிகலா உதவியாளர் சமர்பித்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் ஆஜரானார். அவரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் கார்த்திகேயனின் வழக்கறிஞர் ராஜ்குமார் பாண்டியன் கூறுகையில்,

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக வேறுபட்ட கருத்துகள் கூறியவர்களின் வீடியோ அடங்கிய பென்டிரைவை விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளோம். பொன்னையன், பி.எச்.பாண்டியன் உள்ளிட்டோர் பேசிய 24 வீடியோக்கள் பென் டிரைவில் உள்ளன. மேலும், வீடியோவில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார்.

இந்நிலையில், ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதிக்க ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்ற போது கார்த்திகேயன் பார்த்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க