• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ் !

October 30, 2017 தண்டோராகுழு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக விசாரணை கமிஷன் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கூறியுள்ளர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தது.இதையடுத்து இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, ஆறுமுகசாமி பொறுப்பேற்றுக்கொண்டதும் அக்டோபர் 30ம் தேதி விசாரணை தொடங்கும் என்றும் போயஸ் கார்டனில் இருந்தும் விசாரணை தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதனால் இன்று விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் துவங்க வில்லை.

இது குறித்து ஆறுமுக சாமி கூறும்போது,2 நாட்களுக்கு பிறகு விசாரணை நடத்தப்படும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாகவும் மரணம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட புகார் கடிதங்கள் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க