• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நியமனம்

September 25, 2017 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை கமிஷனின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பின் அவர் 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஜெயலலிதா நன்றாக உள்ளார், விரைவில் வீடு திரும்புவார் என கூறப்பட்டு வந்த நிலையில் டிசம்பர் 5-ம் அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

இதனிடையே அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் குற்றசாட்டு கூறினர். இந்நிலையில் அணிகளும் இணைந்த போது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்த விசாரணை கமிஷனின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை நியமித்து தமிழக அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க